Monday, November 29, 2010

சிரிப்பு ( social))

சிரிப்பு இறைவன் நமக்களித்த பொறுப்பு
சிரித்தால் சிந்தை மயங்கும் -- சிலரின்
சிந்திப்பும் மாறும்
சிரிப்பை சில்லரைப் போல
சிந்திக்காமல் கொட்டணும்
சிரிததால் உடல் நோயும் போகும்      
உள்ள நோயும் போகும்

கள்ளச் சிரிப்பு கவிதை ஆகலாம்
காதல் சிரிப்பில் கணவனை ஆளலாம்
கேலிச் சிரிப்பில் குதர்க்கம் காணலாம்
ஆணவச் சிரிப்பில் அழிவைக் காணலாம்
அலங்காரச் சிரிப்பில் அழகை காணலாம்
அமைதிச் சிரிப்பில் அருளை காணலாம்
ஏழையின் சிரிப்பில் இறைவனையே  காணலாம் !

Laughter  is one important responsibility
given by God to the human
A laughter  would swoon the senses
Will bring changes in
someone's thinking also
Laughter should  flow like shillings
without hesitation
It brings health to the body as well
to the soul

A stealing laughter  can become a poem
loving laughter  will win over the life partner's heart
Indecent laughter shows the  sarcasm
In ego laughter  one can see the destruction
graceful laughter  reveals the beauty
In peaceful laughter one can see the  bliss
laughter that comes from the poor shows the God in them !

Saturday, November 20, 2010

மறு பிறவி ( Next Birth )

                                                              
முருகா ! மறந்தும் எனக்கு
முக்தியை கொடுத்துவிடாதே
ஏனெனில்
மறுபடிப் பிறக்க ஆசை
பிறந்தால்
பாட்டும் பரதத்துடன் நளினமானப்
பெண்ணாகப் பிறக்க
என் கரம் பிடிப்பவர்
என் துணைகரமாக  பரதத்தில்
இணைய 
மேடையில் அவர் பாட நான் ஆட
அங்கே சிதம்பர ஆட்சி நடக்கும்
ஆடல் என்றாலே அம்பலத்தான்   தானே

வீட்டிலே என் ஆட்சி மீனாட்சியாக
நான் பாட அவர் ஆடுவர் !
விந்தையான எண்ணமா ? ----- இல்லை இது
சிந்தை மயக்கும் எண்ணம்
எண்ணம் எல்லாம்
வண்ணமயமாகட்டும்
இறைவனின் அருளால்
                  next  birth
My God, don't give me mukthi(heaven ) even by mistake
as I wish  to be  born again   ---When that happens 
I want to be born 
as an elegant ,beautiful,divine dancer and a singer
The man who is  my life partner
should be my dance partner as a singer
I dance on the stage for his tune-- so
there the Lord of Nataraja rules
as He is the embodiment of Dance 

At home I rule so I become  Meenakshi
I sing and my man will dance for my tune
does this thought  sound strange ? ---No
it is so enchanting  and
let all thought become colourful
By Gos'd grace!

Wednesday, November 17, 2010

பயம் ஏன் ( Fear Not )

ஆலிலை மேல் வந்தான் 
ஆயர்க் குலத் தலைவன்
தன் கால் விரல் வாய்க் கொண்டு
கண்டவர் மனம்  கவர்ந்தான்

ஆனிரையை மேய்த்து வந்தான்
யாதவரைக் காத்து நின்றான்
ராதையோடு கூடி நின்று
கோபியரை நாடிச் சென்றான்

பாண்டவரைக் காத்து நின்றான்
பாஞ்சாலிக்கு துயில் கொடுத்து   
அர்ச்சுனனுக்கு  சாரதியாகி
அறிவுக்கு கீதை தந்தான்

HE came on baniyan leaf
Became the head of cowherd families
eating (putting )his foot toe into his mouth
attracted all of them who witnessed it

taking care of the cows
stood there protecting all
being with his beloved Radha
longed to be with gopikas (other women ) as well

He saved the mighty Pandavas by
giving Panjali ( Drupadha) her required saree on time
By becoming the  charioteer to Arjuna
gave us Geetha for our knowledge

பகிர்ந்துகொள் ( Learn to share )

கோடிக்  கோடியாக  வைத்திருப்பவன்
தேடித் தேடி போகிறான் சுகத்தை --ஒரு
கோடியில் இருந்துகொண்டு
கொள்ளைச் சிரிப்பு கொண்ட மக்களிடம்
கோடியை கொஞ்சம் பகிர்ந்துகொண்டால்
தேடிப்  போக வேண்டாம் சுகத்தை
வாழும் இடம் வைகுண்டமாகும்
தானும் வாழ்ந்து பிறரையும்
வாழ வைத்தால் : 
சாகும் வரை விடாது பிடித்துக் கொள்கிறான்
போகும் பொழுது
எதையும் கொண்டு போக முடியாததை
மறந்து
என்ன வேதனை  --- எடுத்துச் சொல்ல
யாரும் இல்லையோ ?

              learn to share
People who have millions and millions of money
keep going after something or other
constantly in search of pleasure
There are millions of poor who
living in some corner of the world
always with full of joy and laughter for life
If the millionaires share just part
of what they have then they have
No need to go in search of joy
as heaven it becomes where they live
by living and let living others;

Up to  their death they hold onto everything
forgetting they could not take
any single thing when they live this world
what a pity
Isn't there anyone to tell them
about this world   .......?

Tuesday, November 16, 2010

வரம் வேண்டும் ( wanting a boon ! )

மார்கழி மாதம் மாதவனுக்கு கொண்டாட்டம்
மலர் கூட்டம்  பனி தூங்கும் பல்லாக்கு
மாலை தொடுத்தேன் காலை வேளையில்
கோதையிடம் கொடுத்தேன் கோவிந்தனுக்கு
அணியச்சொல்லி
அணிந்தான் அவனும் அழகாக பள்ளிகொண்டு 
அரங்கனாதனாக
உன்னோடு சேர்த்துக்கொண்டாய்
உன் திருமகளை நீ
என்னோடு வாழ என் துணையை நீ
முன்னின்று வந்து முகூர்த்தம் குறித்து
என் கரம் எடுத்து அவன் கரம் இணைத்துடுவாய்
கைகூப்பி நிற்கிறேன் வரம் வேண்டி உன்னிடம் !
                     
                                       wanting a boon !
Lord Krishna is celebrated very specially
in the month of December ( dec 15 th to jan 15 called Markazhi in tamil)
Bunch of flowers are the palanquin for the morning dews
I made a garland in the early morning ,
gave it to Andal(Kothai ) (the goddess Lakshmi who was born as a human and in love with Lord Krishna)
asked her to give the garland to her Lord
He wore it standing beautifully as Lord Ranganathan !
Told him "U have taken your lady ( goddess) with you ,now come in front of me ,find an auspicious day to join my hand into my Lord's hand "
I stand in front of you with folded hands asking this boon !

                           

Monday, November 15, 2010

காதலர்கள் ( Lovers )

தென்றல் மெல்ல வீச
திங்கள் வானில் உதிக்க
தென்னங் கீற்று  ஆட
கயற்றுக் கட்டிலில் தலை சாய்த்தேன்--- அங்கே
காதலன் எனைத்    தாங்கிக்கொள்ள
அழகான என் கன்னத்தில்
பதித்தான் தன் உதடுகளை
முகம் பார்க்க நாணி  நான் ஒரு
முறுவலைப் பரிசாகக் கொடுத்தேன்
இதமான  இந்த ஏகாந்தத்தில்
இளமை ஊஞ்சலில் ஏறியது இதயம்
தள்ளாத வயதிலும் இந்த
பொல்லாத ஆசை வந்தால்
சல்லாபத் தேரில் ஏறி
உல்லாசம்  போகலாமே

The breeze blew  gently
The moon was seen on the sky
The coconut trees started  swinging  gently
I laid down myself on the cot
while my lover holding me there
He pressed his lips on my
beautiful cheeks
feeling shy to look at his face
gave him a nice smile as a gift 
at this beautiful left alone time
heart got into the swing of youth
even at old age if this feeling come
should get onto the chariot of love
and start traveling happily



         

Friday, November 12, 2010

ஆறாம் அறிவு ( The sixth sense ! )

பாம்புக்கு பல்லில் விஷம் ---அது
ஐந்து அறிவு கொண்ட ஜந்து --பல
மனிதருக்கு சொல்லில் விஷம் ---அவன்
ஆறு அறிவு கொண்டவனாம் !
பாம்பு கடித்தால் விஷம் முறிக்க வைத்தியம் உண்டு
மனிதனின் சொல் விஷம் உடலில் ஏறினால்
எடுக்க மருந்தே கிடையாது
இது ஆறு அறிவின் விளைவா ???

பாம்பின் கால் பாம்பு அறியும் என்பார்
மனிதனை மனிதன் அறிய முடியுமா ????

புலி பாய்வதற்கு முன் பதுங்குமாம் --- அதுக்கு
மனதில் பயம் இருக்கலாமோ
மனிதன் பதுங்குவதே  இல்லை
நேரடியாகத் தாக்கிவிடுவான் ---நெஞ்சில்
துளியும்  பயம் இலை  போலும்---இதற்கும்
அவனின் ஆறு அறிவுதான்  காரணமோ !

                The sixth sense !
Snake has its poison in its teeth
It is believed it has only five sense ---but
mankind has poison in their word
he is believed to have six senses--If
bitten by snake there are ways
to take out the  poison --- but if
the man's word stings us
have no medicine for that
Is it  because of he having six senses ?


There is a saying that a snake knows the other one
can one human understand the other one ?

believed that the tiger hides
before attacking its prey
may be it has some fear in it
but human does not hide as
he attacks directly --may be
has no fear at all in his heart
is that  also because of his sixth sense ???