Tuesday, July 31, 2012

என் உயிர் காதலியே ( romantic)

 

நீ  என் கண்ணீரில் இருந்தால்
கரைந்திடுவாயே என கலங்கி
நின்ற போது  என் சிரிப்பாக வந்தாய்
சிங்காரமாக நான் மின்ன

நீ என் வறுமையில் இருந்தால்
வாடிடுவாயோ என
வருந்தி நின்ற போது  என்
பொருமையிலே வந்து நின்றாய்   எல்லாம்
பொன்மயமாக மின்ன


நீ  என்  தனிமையிலே வந்தால்
தித்திப்பாய் என சிந்தித்தபோது  என்
சிந்தனையே    நீயாய்  இருந்தாய்
வியந்தேனடி  என் கண்ணம்மா     ...................




--

Friday, July 27, 2012

நா காக்க நல்லவை பிறக்க ( social) 2

பந்தை வேகமாக  எட்டி
உதைத்தால்
வெற்றிகள் குவியலாம் விளையாட்டிலே
உள்ளத்தை வார்த்தையால்  எட்டி
உதைத்தால்
வலிகள் தான்  குவியும்





 உள்ளங்களை  வலிகள்
உடைக்கலாம்
உள்ளங்கள்    உடைந்தால்
உறவுகள்     அழியும்
உணர்வுகள்   அழிந்தால்
உலகம்    வேறுபாடும்
வேற்றுமை   வீழ்ச்சிக்கு
விதையிடும்
விதை விதைத்த நாம்
வினை அறுக்க
நேரிடும்









நாகாக்க  காவாக்கால்
சோ  காப்பர் சொல்லிழுக்கப்பட்டு  என
வள்ளுவன் சொன்னது போல
வலிகளை  இதயம் ஏந்தினால்
வாழ்வே   நரகமாகும்




காப்போம் நாவை நாம்
வாழ்வோம்  இனிமையிலே