Thursday, October 27, 2016

ஒன்றுபட்டால் வாழ்வு


                                     ஒன்றுபட்டால்  வாழ்வு

அன்று

நடந்தால் வாழி காவேரி என
அகத்திய மாமுனி அழைக்க
அவளும் ஜதி சேர்த்து  நடை பழகி
அழகிய ரதி போல வந்தாள் 
நம் நாடு செழிக்க      காவேரி தாய்
அவள் வாழ்க

இன்று
அன்போடு கைக்  கூப்பி
அழுது வேண்டினாலும்  அவளின்
உரிமை மறுக்கப்படுகிறதே
இந்த கர்நாடக பண்பு ஏன்
கலாச்சாரம் இறந்து விட்டதா
நம் இடையே

இங்கு

இந்தியர்கள் எல்லோரும் என்று
இணைந்தே  வாழ்ந்தால்
இல்லாதது ஏதும் இல்லை
இந்த பாரதத்  திரு நாட்டிலே
ஒன்று படுவோம் உயர்வோம்
ஒப்பில்லா இறைவன் அருளாலே ....... 

ஒன்றுபட்டால் வாழ்வு




அன்று

நடந்தால் வாழி காவேரி என
அகத்திய மாமுனி அழைக்க
அவளும் ஜதி சேர்த்து  நடை பழகி
அழகிய ரதி போல வந்தாள் 
நம் நாடு செழிக்க      காவேரி தாய்
அவள் வாழ்க

இன்று
அன்போடு கைக்  கூப்பி
அழுது வேண்டினாலும்  அவளின்
உரிமை மறுக்கப்படுகிறதே
இந்த கர்நாடக பண்பு ஏன்
கலாச்சாரம் இறந்து விட்டதா
நம் இடையே

இங்கு
இந்தியர்கள் எல்லோரும் என்று
இணைந்தே  வாழ்ந்தால்
இல்லாதது ஏதும் இல்லை
இறைவன் அருளாலே என
இசையும் முழங்குமே 

Tuesday, October 25, 2016

வாழிய தமிழ் நாடே ......

                    வாழிய தமிழ் நாடே .....
.          

வானமே  வானமே  மேகம்  எங்கே  கூறுங்கள்
மேகமே கரு மேகமே நீரை கொஞ்சம் பருகுங்கள
 மின்னலே மின்னலே ஜாலம் கொஞ்சம் காட்டுங்கள்
இடிகளே இடிகளே முழக்கம் கொஞ்சம் செய்யுங்கள்
மனிதனே மனிதனே பாட்டு கொஞ்சம் பாடுங்கள்
வருணனே  வருணனே  இரக்கம் கொஞ்சம் காட்டுங்கள்

அதிசயம்   நிகழட்டுமே    இங்கு

மேகம் உருண்டிட இடிகள்  முழங்கிட
மின்னில் பளிச்சிட  வானம் பொழிந்திட
பூமி நனைந்திட  நதிகள் பெருகிட
பயிர்கள் தழைத்திட  ஏழைகள் சிரித்திட
இறைவன்  மகிழ்ந்திட  நாடும் வளம்பெற
இசைகள்  ஒலித்திட இன்பம் பெருகிட
வாழிய வாழிய வாழிய தமிழ் நாடே ......
வளர்ந்திட வளர்ந்திட நின்  பெருமையே