Saturday, April 30, 2011

வாருங்கள் வெல்வதற்கு (social )

சித்திரம்  பேசினால்
சிந்தை மயங்குமாம்
சொன்னான் ஒரு கவிஞன் அன்று
சிற்பங்கள் ஆடினால்
சொர்கங்கள் திறக்குமா
நான் வியக்கிறேன் இன்று
சொர்கங்கள் திறந்தால்
இன்பங்கள் கூடலாம்
இன்பங்கள் கூடினால் பல
ஜென்மங்களை வெல்லலாம்
ஜென்மங்களை வென்றால் பின்
இறைவனடி சேர்ந்திடலாம்
புறப்படலாமா வெல்வதற்கு .............

Winning isn't everything ,it is the only thing said by Great Football  Coach :Vince Lombardi


Thursday, April 28, 2011

மே மாதப் பெண்ணே !





மேகங்கள் வந்தால்
தாகங்கள் தீரும் பூமிக்கு
மே மாதம் வந்தால்
வாழ்த்துக்கள் குவியும் உங்களுக்கு
பிறப்பின் பெருமையை
எடுத்துச் சொல்லி

கல்லூரி மாணவிகளுக்கு
கற்கண்டு நீங்களோ
கற்றவைகளை அள்ளிக் கொடுத்து
கலைவாணி ஆகினீரோ
உங்களை வாழ்த்த
எங்களுக்கு சந்தர்ப்பம் இது
வளரட்டும் உங்கள் ஆயுள்
தொடரட்டும் உங்கள் தொண்டு 
கலைவாணியும்  வாழ்த்துவாள்
கருணையோடு உங்களை இன்று  ( May 1st ) 

 

Sunday, April 24, 2011

இளமை உரித்தாகுக (Stay young )

பெண்  ஒன்றைக் கண்டு
பிரமித்து நின்றான் ஒருவன்
அவள்  வாழ்வில் 
கடந்து வந்த உயரத்தை எண்ணி

வியப்பு வளரும்போது
வயது குறைகின்றது
இளமை துள்ளுகிறது
இதயம் இனிக்கிறது


வியக்கும் வண்ணம்  வாழ்ந்து 
விந்தைகள் பல புரிந்தால் 
இளமை  உரித்தாகும் 
இவ்வுலகில் எல்லோருக்கும் !


A man was amazed looking
 at a lioness  the height
that it has reached
Exclamation of delight
when it grows in ones life
the age gets reduced
The youth dances there
the heart is filled
this is nature's gift
why not live a life
filled with exclamations
doing miracles
let youthfulness come
to every one  in the world! 

பரிசு ( romance)

இதயங்கள் இடம் மாறின
 இமைப்பொழுதில்
இது காதலின் மேல்
கவிஞர்கள் கூறும் கருத்து
இதயம் பெரும்பாலும்
காதலுக்கு சொந்தம்
தன்னையே நினைக்கும் இதயம்
காதலில் விழுந்துவிட்டால்
காதலுக்கு சொந்தமானவரை
நினைத்து இயங்குகிறது
இதுதான் இதயத்தின் இடமாற்றம்
இது ஒரு அழகிய தடுமாற்றம்
காதலுக்கு வயது ஏது ---இந்த
காதல் அந்த ஈசனின் மீதும் வரலாம்
காதல் ஆழமானால் வயதும் நீளமாகும்
காதல் கொடுக்கும் பரிசு இது
பரிசை பெறலாமே அனைவரும்

Friday, April 22, 2011

நாளையின் நம்பிக்கை (social)

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு
இது பழமொழி
தாயின் கருவறையில்  உள்ளபோதே
இந்நிலை வந்து விடுகிறது 
 பிறந்த பின்
தாய் பாலூட்டுகிறாள் சீராட்டுகிறாள்
சோறு ஊட்டுகிறாள் தன்
இடையில் இடுக்கிக்   கொண்டு --அவன்
போகும் திசையெல்லாம் இவள் நடை --அவன்
உறக்கமும் இவளின்  விழிப்பு 
காலங்கள் கடக்கிறது ---தன்
கோலங்களை காட்டி 

தாரம் தேடும் தருணம் மகனுக்கு 
தாரை வார்த்து தருகிறாள் தாயும் --உடன் 
தாய் தூரத்து சொந்தம் ஆகிறாள் 
என்ன விந்தையடா  இது ???
உறவுகள் வளர்ந்தால் தான் அது
உறவாகும்
முறிந்தால் அது முடிவாகும்

செடிகள் சிறந்து தழைக்க
பூத்து மலர
காலங்களின் நிலைக்கு ஏற்ப அதை
கத்தரித்து விட்டு வளர்ப்பார்
உறவுகளும் காலப்  போக்கில்
சிதைந்து போகும்போது
சற்று விலகிப் போனால்  மறுபடி
தழைக்கலாம்
பூத்து மலரலாம்

நம்பிக்கை தானே நாளை !!!




Wednesday, April 20, 2011

தெய்வீக நிலை

பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை என்பர்
நிறத்தில்
பாலுண்டால் பசியாறும்
கள்ளுண்டால் போதை ஏறும்
 
பசியும் மறுபடியும் வரும்
பால் அருந்த வேண்டும்
போதையும் தெளிந்து விடும்
கள்ளும் அருந்த வேண்டும்
  
பசியாறினால்   போதுமே  வாழ்வுக்கு
போதை வேண்டாமா உயிர் வாழ
பால்  அருந்தி பசியாறி
இறைவனின் நாமம்  உச்சரித்து
அந்நிலையில் இருக்கலாம் 

Saturday, April 16, 2011

வேண்டாமே இது !

பிறர் வாழ்ந்து  பார்க்க
பொறுப்பதில்லை பலருக்கு  --இது
பிறப்பிலே வந்த குணமா ----இல்லை
பிறரால்   கொடுக்கப்பட்ட   பொருளா 

பிறரையும்  நாமாக  நினைத்தால்
பிறந்திடுமா   இந்த   குணமும்
பிறரையும்    வாழவைத்து   வாழ்ந்தால்
பிறப்பின்    பெருமை   அல்லவா   உயரும் !

Tuesday, April 12, 2011

Light  up the candles
  looking at the moon light
Bright up the days
  watering the garden
Straight up the back
  sitting at the riverbank
pick up some flowers
thinking of your LOVER

Monday, April 11, 2011

Force not

When there is no force
 the earth revolves around smoothly
When there is no force
 the  ocean undulates beautifully
when there is no force
the wind blows gently/softly
when there is no force
the trees swings slowly
when there is no force
the love flows unconditionally
not force yourself into anything
but force yourself to
enjoy everything around you
smothly ,beautifully ,gently
slowly and unconditionally
you sure see the  heaven on the earth
without any force !

Friday, April 8, 2011

முத்தம் ( romance )


 

முத்தம் அதை நினைத்தால் எங்கும்
  உள்ளம் அது என்றும் இனிக்கும்
முத்தம் அதை கொடுத்தால்  ஏறும்
   கர்வம்  அது தலை வரைக்கும்
முத்தம் அதை பெற்றால்  மாறும்
  சத்தம் அது இதயம் வரைக்கும்
முத்தம் அதைக்  கொண்டால் (வென்றால் )
  வாழும் காலம் நீளும் அது ஒரு
    ஒரு  யுகம் வரைக்கும் !

யாவும் அருள்வாய்

createanawesomeuniverse_thumb3

ஒளியாக்கு   என்னை   அருளும் ஜோதியே ---- வழிகாட்டும்
 விளக்காக்கு   என்னை  அருளும் ஜோதியே
உதவும் கரமாக்கு என்னை அருளும் ஜோதியே
இறைவழி காண இரையாக்கு என்னை அருளும் ஜோதியே
இறந்த பிறகும் உன்னை  நினைக்கும் இதயமாக்கு என்னை
அருள் பெரும் ஜோதியே !!!

Wednesday, April 6, 2011

அனைத்தும் அனைவருக்கும்

       
15% Off


நம்மைச் சுற்றி வட்டம் இட்டுக் கொண்டால்
பட்டாம் பூச்சி போல பறக்க முடியுமா
இதயத்தை இதமாக பறக்க விட்டால்
இனிமையாக பற்றிடலாம் எதையுமே
எண்ணங்களை வலுவாக்கிவிட்டால்---- பல
வண்ணங்களைக் கண்டிடலாம் வாழ்வினிலே
வேள்விகளை  மனதால்  செய்தால்
வென்றிடலாம் வாழ்வினையே
நினைத்தவை எல்லாம் கிட்டிடும்
நிமிர்ந்து நில்லுங்கள் அனைவருமே !

Tuesday, April 5, 2011

அன்பே மையம்

புவியின் ஈர்ப்பு சக்தி(மையம் ) அன்பு
இந்த சக்தியிலிருந்து  சற்று
விலகினால் சிதறிவிடுகிறது
மானிடனின் வாழ்வு
மறுபடி அந்த ஈர்ப்புக்குள்
வரும் வரை அவன் தவிக்கிறான்
தவிப்பில் தவறுகளும் நிகழலாம்
இது இயற்க்கை

வானளவு உயர்ந்த மரமும்
பூமியிலிருந்து தோன்றியவையே
இதன் காரணம்தானோ
தங்கள் உடைமைகளை (இலை ,பூ,பழம் )
பூமிக்கே அற்பணிக்கிறது
அன்பு ஈர்க்கிறது அங்கே

பூக்கள் மலரும் போது
எடுத்துக்கொள்ளும் ஒளி
சூரியனோ சந்திரனோ --அவை பின்
சேருவது பூமியையே
அங்கும் ஈர்ப்பு மையம் அன்பே

இந்த ஈர்ப்பு சக்தி கலங்கும் போது
உண்டாவது தான்
சுனாமியும் நில அதிர்வும் மற்ற
பூமியின் கொந்தளிப்பும் போல

அன்பை மையம் கொள்வோம்
ஈர்பபோம் அனைத்தையுமே !


Monday, April 4, 2011

உலகக் கோப்பை April 2nd , 2011

              Nike Muse, goddess of musical victory, with lyre | Greek vase, Athenian red figure lekythos
ஓடி விளையாடு பாப்பா என்ற
பாரதியின் கவிதையை மனதில்
கொண்டேன் இன்று
ஓடி விளையாடி உலகக் கோப்பையை
கையில் ஏந்திய கிரிக்கெட் வீரர்களைக்
கண்டேன் இன்று
கோடி கோடி மக்களின் கொள்ளை ஆசையை
பூர்த்தி செய்த கம்பீரக் குழந்தைகளை
வாழ்த்தினேன் இன்று
விளையாட்டோ உண்மை வாழ்வோ
எங்கும் எதிலும் எல்லோருக்கும்
வெற்றி கிடைக்க வணங்கி நிற்ப்போம்
பூலோக மாதாவை   !!!