Monday, October 26, 2015

தீபங்களே ! ஒளி வீசுங்களேன் !

                          தீபங்களே !  ஒளி    வீசுங்களேன் !









தித்திக்க   தித்திக்க   வருகின்றதே
தீப ஒளி   எங்கெங்கும்  ஐப்பசியிலே

கண்ணுக்கு  விருந்தாக   வண்ணங்கள்  -  நம்
எண்ணங்களை   வடிக்கும்    ஆடையிலே





மின்னல்கள்    வந்தது  போல கண்கள்   கூச
மின்னும்   மத்தாப்பு  வித்தைகள்   பூமியிலே - மகிழ்ச்சிப்  

பட படப்பை   நெஞ்சினில்   ஏற்றும்
பட்டாசு   சத்தங்கள்   தெருவினிலே   - வகை வகையாக

தித்திக்கும்   சுவையான   தின்பண்டங்களை  
 தருமே  தீபாவளி  எல்லோர்   அகத்திலுமே





காணும்   அற்புத   காட்சியை   கவிதையாக்க
கற்பனைக்கும்   பஞ்சமில்லை   இதயத்திலே

தீமைகள்   இனி   இல்லை  என்று சொல்லி
தீபங்களே   எங்கும்   ஒளி    வீசுங்களேன்