Thursday, September 19, 2013

தழுவி தவழும் சுகம் (nature)

நான்   நிற்கின்ற   புனிதமான  பூமி

   அதனைத்  தழுவி வளர்ந்த

செடி கொடிகளில்  பூத்துக் குலுங்கும்

   வண்ண மலர்களைத்  தழுவிய  காற்று

மேகமதை   எட்டித்     தழுவ 

   மேகமது  இறங்கி வந்து

மலைகளின்  மேல்   தவழ 

     மலையின் அழகு என்  மனதை  தழுவ 

என்  மனமோ இயற்கையின் மடியில் தவழ 
 
இனிய  பல  எண்ணங்கள்
   
  மெல்ல  என்   உணர்வைத்  தழுவ 

இரவின் நிலவொளியின் அணைப்பில்

  தூக்கம் என் கண்களைத்  தழுவ 

ஒரு  புது  உலகப்  பயணம்  நேர்ந்ததே....................