Friday, January 31, 2014

எனக்காக நீ .....( Romance

முத்தாரம் ( pearl necklace ) நானும்  கேட்கவில்லை  உன் அன்பு
முத்தங்களைச்  சரமாக எனக்கே  கொடுத்தால்

பட்டாடை  ஏதும்  கேட்கவில்லை  என்
பட்டுக் கன்னத்தில் உன் அதரங்களை  பதித்தால்

சொத்தாக எதையும் கேட்கவில்லை  --நீ எனை உன் 
சொத்தாக நெஞ்சோடு அள்ளிக் கொண்டால்

இவை எல்லாம் இல்லை  என்று  நீ மறுத்தால் 
இவ்வுலகில் நான்  இருந்துதான் என்ன பயன் 


கற்பனை  உலகு சென்று   கவி படைத்தாலும்  நான்
காலை ஊன்றி நிற்பது   இப்புவிமேல்தான்

கடவுள் காட்டியவைகளைத் தான் கேட்கிறேன் நானும்  உன்
கருணைக்கும் பஞ்சம்  ஏனோ

இயற்க்கைக்கு புறம்பானது இல்லை இவள் கேட்பது
 இதை இறைவனும்  ஒப்புக்கொள்வான்  மறுக்காது


காதலும் கடவுளும் ஒன்றல்லவோ  இதில் உனக்கு
கருத்து மாற்றமும்  ஏனடா  என்  காதலா.............





  

Tuesday, January 21, 2014

காவியம் படைக்கலாமே ( romantic poem)

தலை அணைகள் சேர்ந்து இருந்தாலும்
பல கட்டில்களில் 
நினைவலைகள்  வேறுபட்டு இருக்கும் 
தம்பதிகளிரிடையே 

நினைவுகள் ஒன்றாக இருந்தாலும் 
நீயா நானா நிகழ்வில்  இருப்பார் 
இருவருமே 

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை 
வீரத்தின் அழகல்லவா 
கட்டிலில் ஜெயித்தவர்கள் 
காவியம்  படைப்பவரே 

Monday, January 20, 2014

அற்புதம் நிகழ .......(social)

கட்டிய  மனைவி
கண் எதிரே  இருக்கையிலே
 கண்டதையும்  தேடுகிறான்
 மணிக் கணக்காக
கணவன்
கணிப்பொறிப்  பெட்டியிலே


விஞ்ஞான வளர்ச்சியில்
கற்ற விதைகளைக் கொண்டு
வெற்றிகளை  குவிக்கணும்
பதிலாக
கேள்விகளால் வாழ்க்கையை
நிரப்பலாமா

குடும்பம் கோவில் ஆனால்
நட்சத்திர மண்டலமும்
வீடு புகும்   ராக்கெட் இல்லாமல்

ஆராய்ச்சியால் அறிவை
பெருக்கணும்
அறியாமையை தவிர்க்கணும்

அறியாமை  நீங்கின் அங்கே
அற்புதம்  நிகழும்