Thursday, October 10, 2013

குதூகலம் ( social)



சொக்கா  போடாமல்  இருந்தால்தான்  குழந்தையா 

   மனம்  திறந்து  இருந்தாலும்  குழந்தையே 

கையில்  கிலுகிலுப்பை  பிடிப்பது  குழந்தை  எனின் 

   மனதில்  கலகலப்பை  கொண்டதும் குழந்தையே 

பல் இன்றி வாய் மலர்ந்து சிரிப்பது குழந்தை
   பல் தெரிய மனம்  திறந்து சிரிப்பதும் குழந்தையே 

குழந்தைகள்  எங்கும்  நிறைத்து  இருந்தால் 
   
     குதூகலம் நிறைந்த உலகை காணலாம்