Saturday, January 31, 2015

குழந்தை

                                                    குழந்தை 


 பட்டுக்    குழந்தையோ   இது
குட்டிக்   குழந்தையோ 
விட்டுச் செல்ல மனமில்லையே  
கட்டி   எனை   ஆள்கிறதே அது
கட்டிப்  பிடித்து என்னை 
முத்தம்   கொடுத்து  முத்தம் கொடுத்து   என் 
முன்  உதடும்   தேய்ந்ததே
முன் உதடு  தேய்ந்தாலும்   இங்கே  இரு
முகமும்  மலர்ந்ததே   
சத்தம்   இன்றி   இரு    மனமும்  இங்கே 
சந்தோஷத்தில் மிதக்கிறதே