Tuesday, November 22, 2011








விதவை எனும் வார்த்தையை
விறகு கட்டையாக்கி 
சிதையில் எறிந்திடு நிரந்தரமாக
அக்னிதேவன் மகிழ்ந்து உன்னை
மங்களம் உண்டாக
வாழ்த்தி நிற்பான்

பெண்ணே
தனி மரம் நிழல் தரலாம் ஆனால்
தோப்பு ஆகாது 
மலர் சூடி மங்களம் பூண்டு
மக்களை காத்து
மணம் பெற வாழப் பிறந்தவள் நீ
தயங்காதே
நல்லெண்ணம் இதயத்தில் ஏந்தி
குங்குமம் நெற்றியில்  சூடி
மணம் பெற்று வாழ 
புறப்படு

எங்கும் மங்களம் உண்டாகட்டும் !!!!!

A wise woman is one who raise herself spiritually very  high so that she never leaves her loving husband ......said by Sumathi Srivatsangam


நன்றி சொல்வோம் (Divine 2 !)

நன்றி சொல்லுவது
நல்லோர்களின் வழக்கம்
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக படைத்த நாயகனுக்கு
நன்றி சொல்லுவோம் நாம்
நலம்பெற  வாழ்வில் உயர்த்தியவர்க்கு
நன்றி  சொல்லுவோம் நம்மை
நலம் பெற வாழ வாழ்த்துவோருக்கு
நன்றி சொல்லுவோம் நம்மை
நலமாக காக்கும் நாட்டிற்கு
நன்றிகளை நாம் குவிப்போம்
நாள்தோறும்
நலன்கள் தானாக நமக்கு
நாள்தோறும் குவியும்

வண்ண மயமாக ( need /nature )


வானவில் பெண்ணே
வண்ணங்களைப்  பூசிக்கொண்டு
வானத்தை அலங்கரிக்கிறாயோ
வட்டமிடும் வண்ணத்துப் பூச்சி
உனைக்கண்டு தன்
வண்ணங்களை எண்ணிக்கொண்டு உன்
எண்ணங்களை எடை போட
வண்ணம் வானுக்குச் சொந்தமா
வாழும் இனத்துக்குச் சொந்தமா என மயங்க
வாழும் மானிடனின்
வாழ்வெல்லாம் வண்ணமயமாக மின்ன
வைபோகம் பொங்கட்டும்
வானவர்கள் வாழ்த்த !!!


Friday, November 18, 2011

எண்ணங்களே சக்தி ( power of thoughts )

எண்ணங்களே  உனது உயிர் சக்தி - உன்
எண்ணங்களுக்கு  சக்திகொடு மனதால்
எண்ணுவதெல்லாம்  நலமாயின்
எண்ணங்களெல்லாம் எல்லாம் உயிர் பெற்று

ஏற்றங்கள்  எங்கும் நிலைத்திடும்
ஏற்றங்களால்   உலகையே ஆளலாம்
ஏற்றங்களின்  நிறைவே இறைவன் பின்
எண்ணங்கள் எல்லாம்   இறைமயமே