Wednesday, June 15, 2011

மங்களம் என்றும் ! ( social )

விதவை எனும் வார்த்தையை
விறகு கட்டையாக்கி  
சிதையில் எறிந்திடு நிரந்தரமாக
அக்னிதேவன் மகிழ்ந்து உன்னை
மங்களம் உண்டாக
வாழ்த்தி நிற்பான்
பெண்ணே
தனி மரம் நிழல் தரலாம் ஆனால்
தோப்பு ஆகாது  :நீ
மலர் சூடி மங்களம் பூண்டு
மக்களை காத்து
மணம் பெற வாழப் பிறந்தவள்
தயங்காதே 
நல்லெண்ணம் இதயத்தில் ஏந்தி 
குங்குமம் நெற்றியில்  சூடி 
மணம் பெற்று வாழ  
புறப்பட்டு
எங்கும் மங்களம் உண்டாகட்டும் !!!!!

A wise woman is one who raise herself spiritually very  high so that she never leaves her loving husband ......said by Sumathi Srivatsangam

No comments:

Post a Comment