Monday, May 23, 2011

எல்லாம் அவன் செயல்

நல்லவை நல்லவர்க்கு நடந்திட --தன்
நலம்  இல்லார்க்குப்  பிடிப்பது இல்லை
ஊக்கம் கொடுக்க மறுத்து  தன்
ஊனத்தைப் புகுத்திடுவர்
ஆதவனுக்கும் வெண் மதிக்கும்
கிரகணங்கள் வரலாம் --ஆனால்
ஆதவனையும் ஆசை முகம் காட்டி இரவை
அலங்கரிக்கும் மதியவளையும்
அடைக்கத் தாழ்கள் தான் உண்டோ
நல்லவை எண்ணி நல்லதை செய்து
நடை பயிலுவோம் வாழ்வில்
நடப்பவை  எல்லாம்  நலமாகும்
நாராயணன் அருளாலே






No comments:

Post a Comment