Friday, May 13, 2011

தாயும் தெய்வமும் ( social)

அங்கத்தில் பாதியை
அம்பிகைக்கு அளித்து
அர்த்தநாரீஸ்வரன்
ஆகினான் ஈசன் --தன்
அங்கத்தில் பங்கு கொடுத்து
ஓர் உயிரை ஈன்றெடுத்து
அன்னையாகிறாள் பெண்
ஈன்றவள் ஈசனுக்கு
சமமாகிறாள் இங்கே
பெண்மையைப் போற்றுங்கள்
மென்மையைக்  காட்டி
தாய்மைக்கு    தலை வணங்குங்கள்
தாயைக்  காப்பாற்றி !



No comments:

Post a Comment