Tuesday, April 5, 2011

அன்பே மையம்

புவியின் ஈர்ப்பு சக்தி(மையம் ) அன்பு
இந்த சக்தியிலிருந்து  சற்று
விலகினால் சிதறிவிடுகிறது
மானிடனின் வாழ்வு
மறுபடி அந்த ஈர்ப்புக்குள்
வரும் வரை அவன் தவிக்கிறான்
தவிப்பில் தவறுகளும் நிகழலாம்
இது இயற்க்கை

வானளவு உயர்ந்த மரமும்
பூமியிலிருந்து தோன்றியவையே
இதன் காரணம்தானோ
தங்கள் உடைமைகளை (இலை ,பூ,பழம் )
பூமிக்கே அற்பணிக்கிறது
அன்பு ஈர்க்கிறது அங்கே

பூக்கள் மலரும் போது
எடுத்துக்கொள்ளும் ஒளி
சூரியனோ சந்திரனோ --அவை பின்
சேருவது பூமியையே
அங்கும் ஈர்ப்பு மையம் அன்பே

இந்த ஈர்ப்பு சக்தி கலங்கும் போது
உண்டாவது தான்
சுனாமியும் நில அதிர்வும் மற்ற
பூமியின் கொந்தளிப்பும் போல

அன்பை மையம் கொள்வோம்
ஈர்பபோம் அனைத்தையுமே !


1 comment:

  1. I got to read some of ur poems today ma....What a woman u r!Never knew this talent of urs....Im simply overwhelmed to see this new facet of urs!Way to go.....U ROCK!!!!!!!!!!!

    ReplyDelete