Monday, March 28, 2011

மணநாள் வாழ்த்து

மணக் கோலம் பூண்டு
ஒரு ஆண்டு ஆகிய நிலையில்
இனிமையான நினைவுகளை
இதமாக எண்ணி மகிழ --என்றும்
புது மணத் தம்பதிகளாகப்
புதுமையுடன் வாழ
உற்றார் உறவினருடன்
உணவுண்டு மகிழ ---இன்று
பெற்றோர்களின் வாழ்த்தில் --புது
மணமாலை சூடிக்
கரைக்காணா  இன்பங்களை
கடவுள் அருளில்  பெற
மற்றோருடன் நானும் கூடி
வாழ்த்துக்களை மடலில்
அனுப்புகிறேன் மனதில்
ஆண்டவனை  நிறுத்தி !

No comments:

Post a Comment