Thursday, March 10, 2011

இயற்கை துணை......

பூக்கள்    எனைப்    பார்த்துச்  சிரிக்க 
அமைத்தேன்   ஒரு   பூந்தோட்டம்  அதை 
புல்வெளி வாசத்தை   நுகர   வளர்த்தேன்  -
-புதுப் பசுமையை எங்கும்
காற்றிலே   மெல்ல     பறக்க அன்போடு 
 அழைத்தேன்    பல   பட்டாம்   பூச்சியை  
மேகங்களைத்    தொட்டு அணைக்க  
தூது விட்டேன்    மின்னலுக்கு  
வானின்   தாரகை  அணிய
இரவு  தேவதையை வேண்டினேன் -இவ்
வையகம் வாழ்த்தி வாழ --வாழ்வுக்கு
கேட்கிறேன்  ஒரு    துணையை  .........

No comments:

Post a Comment