Thursday, February 10, 2011

அவனே தவம் divine

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நமக்குள் உள்ள அவனை
நாம்காணும் நிலையிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நமக்குள் உள்ள அவன்
நம்மை நாடி வருகையிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
நம்மை அவன் தனக்குள்
அழைத்துச் செல்லும் அருளிலே

தவங்கள் பலிக்காது போகுமோ தாரணியிலே
புவி ஏழும் உலவாது அவையெல்லாம்
அவன் உள்ளே காணுகையிலே

தவமே அவனாக இருக்கையிலே
பலிப்பதற்கு உளதோ ஏதும் !

No comments:

Post a Comment