Tuesday, February 22, 2011

காரணம் நம் தேடலில்

ஜகன்மாதா அனைத்தையும் துறந்து தன்
நாயகனைத் தொடர்ந்தாள் கானகத்துக்கு
மானிட அவதாரம் எடுத்தவளாக

கானகத்தில் அவள்  கண்டது
பொன் மான்
ஆசை கொண்டாள் அதை அடைய
அழைத்தாள் தன் நாயகனை 

மானிட அவதாரம் எடுத்த
ஸ்ரீ நாராயணனும் சென்றான் அதை
கொண்டுவர உடனே
செய்வது  தவறா சரியா என்ற
கேள்வி இருவரிடமும் எழவில்லை 
மானிட அவதாரத்தில் உள்ளதால்

லோக மாதாவும் எம்பெருமானும்
பூவுலகுக்கு வந்ததின் காரணம்
நன்கு அறிவர்
நாம் அறிவோமா நம் பிறப்பின்
காரணத்தை ?

நம் தேடலில்தான் காரணம் உள்ளது
கண்டிபிடிக்க வேண்டும் நிச்சியமாக 
இறைவனை மனதில் நிறுத்தி !



No comments:

Post a Comment