Sunday, February 13, 2011

இறவா வரம் ( divine )

மண்ணில்
விதைத்தவை  எல்லாம் பயிராவதில்லை
பயிரானவை எல்லாம் கதிராவதில்லை
கதிரானவை எல்லாம் காயாவதில்லை
காயானவை எல்லாம் கனியாவதில்லை
கனிந்தவை  எல்லாம் சுவைப்பதும் இல்லை
சுவைத்தவை எல்லாம் ஜரிப்பதும் இல்லை
எப்படி
மொட்டுக்கள்  எல்லாம்  மலர்வதிலையோ
மலர்ந்தவை எல்லாம் மணம் பெறுவதில்லையோ
மணம் பெற்றவைஎல்லாம்
இறைவனை அலங்கரிப்பதில்லையோ
அப்படியே
மண்ணில்
பிறந்தவர் எல்லோரும்
பிறந்தவர் ஆவதில்லை ------ ஆனால்
பிறந்தவர்  எல்லோரும் இறந்தவர் ஆவர்
ஒரு நாள் ----இங்கும்
தானும் வாழ்ந்து பிறரை வாழவைப்பவர்
இறைவனடி சேர்ந்தும்
இறவா வரம் பெறுவார் !





No comments:

Post a Comment