Tuesday, February 15, 2011

வேண்டும தாய் அகம்

பிறந்தது என் தவறல்ல பெருமானே
பிறவியின் பலனும் என் விருப்பம் அல்ல பெருமானே
பிறப்பும்   இறப்பும்  என் கையில் இல்லாத போது---- மறு
பிறவி ஒன்றை வேண்டுவதும் நான் அல்ல பெருமானே
வேதனையும் வேண்டவில்லை சுகத்தையும் வேண்டவில்லை
வேண்டுவது எல்லாம் கொடுக்க
வேலவன் நீ இருக்கையிலே பெருமானே
வேல் ஒன்று போதும் உன் மயில் ஒன்று போதும்
மனதில் கொள்ள
வேள்விகள் தேவையில்லை
விரைவில் நீ வருவது திண்ணம்
வேதனைகள் எனக்கில்லை பெருமானே
தாய் அகம் நான் செல்வேன் -சிறு
குழந்தையென தவழ்திடுவேன் -அங்கே எனை
குழந்தையென நிறுத்திக்கொள்ளும்  நெஞ்சினிலே !


No comments:

Post a Comment