Tuesday, February 22, 2011

மகத்துவம்

ரோஜா மிக அழகான மலர்
வாசம் கொள்ளையாகக் கொண்டது
பார்ப்பவர் எல்லோரும்
பறிக்கத் துடிப்பார் -அது
தன்னோடு முட்கள் கொண்டது
ஏன் என்று கேட்க முடியாது --இது
இறைவன் படைப்பு
காரணம் இருக்கத்தான் இருக்கும்
மலரை குறை கூறாதே
உனக்கு மலரை மட்டும்
பறித்துக்கொள்ளும் அறிவை அந்த
பரம்பொருள் கொடுத்துள்ளான்

அழகு ஆர்த்திக்க வேண்டிய ஒன்று
ஆண்டவன் அழகு மயமானவன் --அவனை
அழகை வைத்து ஆராதிக்கலாமே  
மலரை ஆசையோடுப்  பறித்து
உன் பக்தியோடு அதையும்
இறைவனடி சேர்
இறைவனடி சேர்வது மலர் மட்டும் அல்ல ---உன்
உடல் பொருள் ஆவி அனைத்துமே
மலரின் மகத்துவம் இது !

No comments:

Post a Comment