Sunday, February 13, 2011

நட்பின் முட்கள் ( or புல்லுருவி )

பெண் உருவில் ஒருத்தியைக் கண்டேன்
அழகிய கண்களைக் கொண்ட அவளுக்கு
பழகவும் தெரியுமென நினைத்து
பழகும் நாட்களைத் தொடர்ந்தேன் ---அவளுடன்
அழகிய நினைவுகள் தொடருமென
தொடர்ந்தது நாட்கள் தான் ---ஆனால்
கசந்தது நட்பு ---நல்லவள் அவள்
உள்ளம்  உள்ளவள் என நினைத்தேன்
உள்ளம் அங்கு இல்லை ---வெறும்
பள்ளம் இருப்பதைத்தான் உணர்ந்தேன்
பள்ளம் முழுவதும் பொறாமை எனும்
முட்கள் நிரம்பி வழிவதையும் கண்டேன் ---வெறும்
பள்ளத்தில் விழுந்தால் வெளிக் காயத்துடன்
வெளிவரலாம் ----ஆனால்
முட்கள் நிறைந்த பள்ளத்தில் விழுந்தால்
முட்களும் நம்மை தொற்றிக்கொள்ளும்
முள்ளின் மேல் விழுந்த சேலையை
மெல்ல எடுப்பது போல
மெள்ள நகர்ந்தேன் பள்ளத்திலிருந்து
சேராத இடம் தன்னில் சேர வேண்டாம் என்
பெரியோர் அன்று சொன்னது இதுதானோ
முட்களை(பொறாமை ) என்னோடு அள்ளி வராது காத்த
 கடவுளுக்கு என் நன்றி உரித்தாகுக ! 

No comments:

Post a Comment