Monday, February 21, 2011

வாழ்வில் வலிகள் வரலாம் ---அவை
நாட்பொழுதில் ஆறிவிடும் ---ஆனால்
இழப்புகள் நேர்ந்தால் அதை
ஈடுகட்ட முடியாது எத்தனை
நாட்கள் ஆனாலும்
இழப்பு நேராதிருப்பது பல சமயம்
நம் கையில் இருப்பதில்லை
இழப்பு நேர்ந்தால் இறைவன்
ஒருவனைக் கொண்டே ஈடுகட்ட முடியும்
என்றும் இழக்க கூடாதது
ஈசனின் திருநாமம்
(சந்தோஷ ) வானில் பறந்தாலும்
(துயரக் ) கடலில் மூழ்கினாலும்
இருக்கப் பற்றிக் கொள்ள வேண்டியது
பரமனின் திருவடிகளை மனதில்
எந்த சுனாமியும் அடித்துச் செல்லாது
எந்த டோர்ணடோவும் அழித்து விடாது  நம்மை
பற்றிக்கொள்ள அவன் திருவடிகள் இருக்கையிலே
பற்றற்ற வாழ்வு பவித்திரம் ஆகிவிடும்

No comments:

Post a Comment