Sunday, February 13, 2011

நானும் குழந்தையே

சிறுமி ஒருத்தி அருகில் வந்தாள்--தலையில்
குடுமி  ஒன்று அணிந்து இருந்தாள்
உரிமையோடு கையைப் பிடித்து
ஓடி ஆட அழைத்துச் சென்றாள்--என்
கண்களை மூடி ஒளிந்து கொண்டாள்
அவளைக் கண்டுபிடித்தால் --தன்
கன்னம் குழியச் சிரித்து நின்றாள்
சிறு குழந்தையென எனை நினைத்தாளே
மறு பிறவி ஒன்றைக் கொடுத்தாளே
கருணை கொண்ட  கடவுளும் என்னை
குழந்தையாக்கி நின்றானே !


No comments:

Post a Comment