Wednesday, May 9, 2018

மனமும் மிதந்ததே

வான்   மேலே  நூறு மின்னல்கள்
பள  பள  என  ஜொலிக்க

கூரை  மேலே  பயங்கர இடிகள்
கட  கட  என  முழங்க
   
சாரல்  மழைத் தூறல்   என்  மேல்
சல  சல  என  விழுந்திட

சாலை யோர  பெரும் மரங்கள்
கல  கல  என  ஆடிட

தரை  மேலே  எனது கால்கள்
சிலு சிலு என  பதிந்திட

 காலின்  வெள்ளிக்  கொலுசுகள்       
ஜிலு  ஜிலு  என  இசைக்க

இன்ப இசையும் மழையும் இணைய
மனமே    மிதந்தது   படகு போல.... ..


 

No comments:

Post a Comment