Wednesday, May 9, 2018

காதலே கருணை

                                         காதலே கருணை

உருண்டு திரண்டு மிரண்டு 
வானில் ஓடும் கருமேகங்களே
பறந்து உயர்ந்து வளர்ந்த மலைமேல் மோதுவது
நீ அதன் மேல் கொண்ட
மோகத்தாலா , கோபத்தாலா  இல்லை உன்
 வேகத்தாலா
காரணம்  எதுவாக  வேண்டுமானாலும்  இருக்கட்டுமே    இதனால்
நீ  பொழிவது ஆனந்த கண்ணீரோ  ?
வானம் இறங்கி வந்து உன் காதலை
சொன்னதால் வந்ததோ  அது ?
காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே

உனது கருணையில்  நனைந்த எங்கள் ஜீவன்
 உன்னை வாழ்த்தி நிற்கிறதே _  இந்த
 புவிமேலே   நீ
உன் காதலை மீண்டும்  மீண்டும் சொல்லவே
வேண்டி நிற்கிறோம்  
காதல் என்றும்  கருணை பொழியுமே...............


 

No comments:

Post a Comment