Wednesday, May 9, 2018

காதல் பேசுதே

பாரதி சொன்னன் அன்று தன்
காதல் கவிதையிலே
 
வீணையடி நீ எனக்கு
வெறும் விரல் நான் உனக்கு என  ...
 
காதல் என்னை பேசவைத்தால்
நானும் சொல்வேன்
 
செல்லம் நான் அவனுக்கு --என்னுள் ஒரு   
வண்ணம் அவன்  எனக்கு
 
என்  கன்னம்  அது  அவனுக்கு 
இந்த எண்ணம் இதில் 
சிவந்த வண்ணம் அது எனக்கு
 
என் மன்னன் அவன் எனக்கு  --என் 
 உள்ளம் அது அவனுக்கு
 
புத்தம்  புது மலர்  நான்  அவனுக்கு 
மலர்  சேரும் தெய்வம் அவன்  எனக்கு
 
குளிர்ந்த நிலவு நான் அவனுக்கு --நான் 
உலவி வரும் பரந்த வானம் அவன் எனக்கு
 
என்  அழகு  அது எல்லாம் அவனுக்கு
அவன் அறிவு அவை யாவும்  எனக்கு

வண்ணம்  நிறைந்த  எங்கள் வாழ்வினிலே  - நல்ல  
எண்ணம்  உதயமாகும்  இதயம் தனிலே   ..........

 


No comments:

Post a Comment