Wednesday, May 9, 2018

போற்றுங்கள் பெண்மையை

                                    வாழை அடி  வாழை

வாழையடி    வாழையாக   என
வாழ்த்துவர்   மக்கள்
மண  மக்களை ....

வெட்ட     வெட்டவளருவது  வாழை
பெண்ணும்  வாழை போல் தான்     பலமுறை
வெட்டப்பட்டாலும் வாழ்விலே
மீண்டும்   மீண்டும்   வளர்கிறாள் உயர்ந்து

மங்கள நாண்  அணியாவிட்டாலும்
மணவாளன் அரவணைப்பு  இல்லாவிட்டாலும்
பெண் வாழ்கிறாள்வ உயர்கிறாள் வாழ்விலே

வாழா  வெட்டியாகவும்  அல்ல
வாழ்வில் வெட்டியாகவும்  இல்லை  பெண்

வாழை தோரணம் இல்லா
கல்யானமா
வாழை இலை  இல்லாத
விருந்தா
வாழைப் பழம் இல்லா
தாம்பூலமா

வாழை என்றாலே மங்கலம்
வாழ்வு என்றாலும்  மங்கலம்  ...பெண்
எங்கு வாழ்கிறாளோ  அங்கே   மங்கலம்
என்றும் பெண்மையை போற்றுங்கள் ...................

No comments:

Post a Comment