Wednesday, May 16, 2018

                                 வெற்றிகள்  காணலாம்

உறவோடு   வாழ்ந்தால்
உரிமைகள்   பெருகி
உள்ளங்கள்   என்றும்  பொங்கும்

இரவோடு   உறங்கி
விடியலில்   எழுந்தால்
இதயங்கள்    வலுப்பெறும்

பசுமையோடு  வாழ்ந்தால்
இனிமை  கூடி
இளமையும்  நிலைக்கும்

அழுக்காமை    அகன்றால்
ஆனந்தம்   பெருகி
அமைதி   குடிகொள்ளும்

மயக்கத்தில்   தடுமாறாமல்
மதி கொண்டு வாழ்ந்தால்
மங்கலங்கள்  என்றும்  நிலைக்கும்

அமைதி தேடி அலையாமல்
இருப்பதில்   நிம்மதி  கொண்டால்
இன்பங்கள்   பெருகும்

விட்டுக்  கொடுத்து  வாழ்ந்தால்
வீரம் பெருகும்   வாழ்விலே
வெற்றிகள் குவியும் 

No comments:

Post a Comment