Friday, May 18, 2018

தெய்வீகம்


                                                 தெய்வீகம்

பெற்றோர்களே  !
பிள்ளைகளுக்கு   அன்பை   காட்டி
பண்பை  கற்பியுங்கள்
சொத்துக்களை  குவித்து
அன்பை    விலைபேசாதீர்கள்

பெற்றோர்களே
பிள்ளைகளுக்கு   அன்பைச்  சொல்லி
தர்மத்தை  கற்றுக்கொடுங்கள்
நாடு   பிற்காலத்தில்  சிறந்த
தலைவர்களைப்   பெறும்   

பெற்றோர்களே  !
பிள்ளைகளுக்கு   அன்பை  ஊட்டி
கலைகளை   வளருங்கள்  மனதில்
கலைகள்  வளர்ந்தால்
கற்பனை வளம்   பெறும்

பெற்றோர்களே !
பிள்ளைகளுக்கு   அன்பை  நீட்டி
கைத்தொழிலை   கற்றுக்கொடுங்கள்
கைத்தொழில்  கற்றால்
கலாச்சாரம்   பெருகும்

கலாச்சாரம்   பெருகினால்
நாடு வளம்  பெறும்
நாடு வளம் பெற்றால்
குற்றங்கள்   குறையும்
குற்றங்கள்   குறைந்தால்
தெய்வீகம்  குடிகொள்ளும் 

No comments:

Post a Comment