Wednesday, May 9, 2018

போற்றுங்கள் பெண்மையை

                                    வாழை அடி  வாழை

வாழையடி    வாழையாக   என
வாழ்த்துவர்   மக்கள்
மண  மக்களை ....

வெட்ட     வெட்டவளருவது  வாழை
பெண்ணும்  வாழை போல் தான்     பலமுறை
வெட்டப்பட்டாலும் வாழ்விலே
மீண்டும்   மீண்டும்   வளர்கிறாள் உயர்ந்து

மங்கள நாண்  அணியாவிட்டாலும்
மணவாளன் அரவணைப்பு  இல்லாவிட்டாலும்
பெண் வாழ்கிறாள்வ உயர்கிறாள் வாழ்விலே

வாழா  வெட்டியாகவும்  அல்ல
வாழ்வில் வெட்டியாகவும்  இல்லை  பெண்

வாழை தோரணம் இல்லா
கல்யானமா
வாழை இலை  இல்லாத
விருந்தா
வாழைப் பழம் இல்லா
தாம்பூலமா

வாழை என்றாலே மங்கலம்
வாழ்வு என்றாலும்  மங்கலம்  ...பெண்
எங்கு வாழ்கிறாளோ  அங்கே   மங்கலம்
என்றும் பெண்மையை போற்றுங்கள் ...................

காதல் பேசுதே

பாரதி சொன்னன் அன்று தன்
காதல் கவிதையிலே
 
வீணையடி நீ எனக்கு
வெறும் விரல் நான் உனக்கு என  ...
 
காதல் என்னை பேசவைத்தால்
நானும் சொல்வேன்
 
செல்லம் நான் அவனுக்கு --என்னுள் ஒரு   
வண்ணம் அவன்  எனக்கு
 
என்  கன்னம்  அது  அவனுக்கு 
இந்த எண்ணம் இதில் 
சிவந்த வண்ணம் அது எனக்கு
 
என் மன்னன் அவன் எனக்கு  --என் 
 உள்ளம் அது அவனுக்கு
 
புத்தம்  புது மலர்  நான்  அவனுக்கு 
மலர்  சேரும் தெய்வம் அவன்  எனக்கு
 
குளிர்ந்த நிலவு நான் அவனுக்கு --நான் 
உலவி வரும் பரந்த வானம் அவன் எனக்கு
 
என்  அழகு  அது எல்லாம் அவனுக்கு
அவன் அறிவு அவை யாவும்  எனக்கு

வண்ணம்  நிறைந்த  எங்கள் வாழ்வினிலே  - நல்ல  
எண்ணம்  உதயமாகும்  இதயம் தனிலே   ..........

 


மனமும் மிதந்ததே

வான்   மேலே  நூறு மின்னல்கள்
பள  பள  என  ஜொலிக்க

கூரை  மேலே  பயங்கர இடிகள்
கட  கட  என  முழங்க
   
சாரல்  மழைத் தூறல்   என்  மேல்
சல  சல  என  விழுந்திட

சாலை யோர  பெரும் மரங்கள்
கல  கல  என  ஆடிட

தரை  மேலே  எனது கால்கள்
சிலு சிலு என  பதிந்திட

 காலின்  வெள்ளிக்  கொலுசுகள்       
ஜிலு  ஜிலு  என  இசைக்க

இன்ப இசையும் மழையும் இணைய
மனமே    மிதந்தது   படகு போல.... ..


 

Thursday, October 27, 2016

ஒன்றுபட்டால் வாழ்வு


                                     ஒன்றுபட்டால்  வாழ்வு

அன்று

நடந்தால் வாழி காவேரி என
அகத்திய மாமுனி அழைக்க
அவளும் ஜதி சேர்த்து  நடை பழகி
அழகிய ரதி போல வந்தாள் 
நம் நாடு செழிக்க      காவேரி தாய்
அவள் வாழ்க

இன்று
அன்போடு கைக்  கூப்பி
அழுது வேண்டினாலும்  அவளின்
உரிமை மறுக்கப்படுகிறதே
இந்த கர்நாடக பண்பு ஏன்
கலாச்சாரம் இறந்து விட்டதா
நம் இடையே

இங்கு

இந்தியர்கள் எல்லோரும் என்று
இணைந்தே  வாழ்ந்தால்
இல்லாதது ஏதும் இல்லை
இந்த பாரதத்  திரு நாட்டிலே
ஒன்று படுவோம் உயர்வோம்
ஒப்பில்லா இறைவன் அருளாலே ....... 

ஒன்றுபட்டால் வாழ்வு




அன்று

நடந்தால் வாழி காவேரி என
அகத்திய மாமுனி அழைக்க
அவளும் ஜதி சேர்த்து  நடை பழகி
அழகிய ரதி போல வந்தாள் 
நம் நாடு செழிக்க      காவேரி தாய்
அவள் வாழ்க

இன்று
அன்போடு கைக்  கூப்பி
அழுது வேண்டினாலும்  அவளின்
உரிமை மறுக்கப்படுகிறதே
இந்த கர்நாடக பண்பு ஏன்
கலாச்சாரம் இறந்து விட்டதா
நம் இடையே

இங்கு
இந்தியர்கள் எல்லோரும் என்று
இணைந்தே  வாழ்ந்தால்
இல்லாதது ஏதும் இல்லை
இறைவன் அருளாலே என
இசையும் முழங்குமே 

Tuesday, October 25, 2016

வாழிய தமிழ் நாடே ......

                    வாழிய தமிழ் நாடே .....
.          

வானமே  வானமே  மேகம்  எங்கே  கூறுங்கள்
மேகமே கரு மேகமே நீரை கொஞ்சம் பருகுங்கள
 மின்னலே மின்னலே ஜாலம் கொஞ்சம் காட்டுங்கள்
இடிகளே இடிகளே முழக்கம் கொஞ்சம் செய்யுங்கள்
மனிதனே மனிதனே பாட்டு கொஞ்சம் பாடுங்கள்
வருணனே  வருணனே  இரக்கம் கொஞ்சம் காட்டுங்கள்

அதிசயம்   நிகழட்டுமே    இங்கு

மேகம் உருண்டிட இடிகள்  முழங்கிட
மின்னில் பளிச்சிட  வானம் பொழிந்திட
பூமி நனைந்திட  நதிகள் பெருகிட
பயிர்கள் தழைத்திட  ஏழைகள் சிரித்திட
இறைவன்  மகிழ்ந்திட  நாடும் வளம்பெற
இசைகள்  ஒலித்திட இன்பம் பெருகிட
வாழிய வாழிய வாழிய தமிழ் நாடே ......
வளர்ந்திட வளர்ந்திட நின்  பெருமையே