Saturday, April 30, 2011

வாருங்கள் வெல்வதற்கு (social )

சித்திரம்  பேசினால்
சிந்தை மயங்குமாம்
சொன்னான் ஒரு கவிஞன் அன்று
சிற்பங்கள் ஆடினால்
சொர்கங்கள் திறக்குமா
நான் வியக்கிறேன் இன்று
சொர்கங்கள் திறந்தால்
இன்பங்கள் கூடலாம்
இன்பங்கள் கூடினால் பல
ஜென்மங்களை வெல்லலாம்
ஜென்மங்களை வென்றால் பின்
இறைவனடி சேர்ந்திடலாம்
புறப்படலாமா வெல்வதற்கு .............

Winning isn't everything ,it is the only thing said by Great Football  Coach :Vince Lombardi


Thursday, April 28, 2011

மே மாதப் பெண்ணே !





மேகங்கள் வந்தால்
தாகங்கள் தீரும் பூமிக்கு
மே மாதம் வந்தால்
வாழ்த்துக்கள் குவியும் உங்களுக்கு
பிறப்பின் பெருமையை
எடுத்துச் சொல்லி

கல்லூரி மாணவிகளுக்கு
கற்கண்டு நீங்களோ
கற்றவைகளை அள்ளிக் கொடுத்து
கலைவாணி ஆகினீரோ
உங்களை வாழ்த்த
எங்களுக்கு சந்தர்ப்பம் இது
வளரட்டும் உங்கள் ஆயுள்
தொடரட்டும் உங்கள் தொண்டு 
கலைவாணியும்  வாழ்த்துவாள்
கருணையோடு உங்களை இன்று  ( May 1st ) 

 

Sunday, April 24, 2011

இளமை உரித்தாகுக (Stay young )

பெண்  ஒன்றைக் கண்டு
பிரமித்து நின்றான் ஒருவன்
அவள்  வாழ்வில் 
கடந்து வந்த உயரத்தை எண்ணி

வியப்பு வளரும்போது
வயது குறைகின்றது
இளமை துள்ளுகிறது
இதயம் இனிக்கிறது


வியக்கும் வண்ணம்  வாழ்ந்து 
விந்தைகள் பல புரிந்தால் 
இளமை  உரித்தாகும் 
இவ்வுலகில் எல்லோருக்கும் !


A man was amazed looking
 at a lioness  the height
that it has reached
Exclamation of delight
when it grows in ones life
the age gets reduced
The youth dances there
the heart is filled
this is nature's gift
why not live a life
filled with exclamations
doing miracles
let youthfulness come
to every one  in the world! 

பரிசு ( romance)

இதயங்கள் இடம் மாறின
 இமைப்பொழுதில்
இது காதலின் மேல்
கவிஞர்கள் கூறும் கருத்து
இதயம் பெரும்பாலும்
காதலுக்கு சொந்தம்
தன்னையே நினைக்கும் இதயம்
காதலில் விழுந்துவிட்டால்
காதலுக்கு சொந்தமானவரை
நினைத்து இயங்குகிறது
இதுதான் இதயத்தின் இடமாற்றம்
இது ஒரு அழகிய தடுமாற்றம்
காதலுக்கு வயது ஏது ---இந்த
காதல் அந்த ஈசனின் மீதும் வரலாம்
காதல் ஆழமானால் வயதும் நீளமாகும்
காதல் கொடுக்கும் பரிசு இது
பரிசை பெறலாமே அனைவரும்

Friday, April 22, 2011

நாளையின் நம்பிக்கை (social)

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும்
வாயும் வயிறும் வேறு
இது பழமொழி
தாயின் கருவறையில்  உள்ளபோதே
இந்நிலை வந்து விடுகிறது 
 பிறந்த பின்
தாய் பாலூட்டுகிறாள் சீராட்டுகிறாள்
சோறு ஊட்டுகிறாள் தன்
இடையில் இடுக்கிக்   கொண்டு --அவன்
போகும் திசையெல்லாம் இவள் நடை --அவன்
உறக்கமும் இவளின்  விழிப்பு 
காலங்கள் கடக்கிறது ---தன்
கோலங்களை காட்டி 

தாரம் தேடும் தருணம் மகனுக்கு 
தாரை வார்த்து தருகிறாள் தாயும் --உடன் 
தாய் தூரத்து சொந்தம் ஆகிறாள் 
என்ன விந்தையடா  இது ???
உறவுகள் வளர்ந்தால் தான் அது
உறவாகும்
முறிந்தால் அது முடிவாகும்

செடிகள் சிறந்து தழைக்க
பூத்து மலர
காலங்களின் நிலைக்கு ஏற்ப அதை
கத்தரித்து விட்டு வளர்ப்பார்
உறவுகளும் காலப்  போக்கில்
சிதைந்து போகும்போது
சற்று விலகிப் போனால்  மறுபடி
தழைக்கலாம்
பூத்து மலரலாம்

நம்பிக்கை தானே நாளை !!!




Wednesday, April 20, 2011

தெய்வீக நிலை

பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை என்பர்
நிறத்தில்
பாலுண்டால் பசியாறும்
கள்ளுண்டால் போதை ஏறும்
 
பசியும் மறுபடியும் வரும்
பால் அருந்த வேண்டும்
போதையும் தெளிந்து விடும்
கள்ளும் அருந்த வேண்டும்
  
பசியாறினால்   போதுமே  வாழ்வுக்கு
போதை வேண்டாமா உயிர் வாழ
பால்  அருந்தி பசியாறி
இறைவனின் நாமம்  உச்சரித்து
அந்நிலையில் இருக்கலாம் 

Saturday, April 16, 2011

வேண்டாமே இது !

பிறர் வாழ்ந்து  பார்க்க
பொறுப்பதில்லை பலருக்கு  --இது
பிறப்பிலே வந்த குணமா ----இல்லை
பிறரால்   கொடுக்கப்பட்ட   பொருளா 

பிறரையும்  நாமாக  நினைத்தால்
பிறந்திடுமா   இந்த   குணமும்
பிறரையும்    வாழவைத்து   வாழ்ந்தால்
பிறப்பின்    பெருமை   அல்லவா   உயரும் !